அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் அநுராதபுர மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுடனான விசேட சந்திப்பொன்று நேற்று (05) அநுராதபுரத்தில் இடம் பெற்றது.

முஸ்லிம் லீக்கின் முன்னாள் தேசிய தலைவர்களில் ஒருவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் சிறப்பு பங்கேற்புடன் இடம் பெற்ற இந்நிகழ்வில் அநுராதபுரம் முஸ்லிம் லீக்கின் அடுத்த கட்ட முன்னர்வுகள், வேலைத்திட்ட கலந்துரையாடல், அடுத்த நிர்வாக காலப்பிரிவை இலக்காகக் கொண்ட வருடாந்த அங்கத்தவர் மாநாடு உட்பட மாவட்ட மட்ட பல்வேறு சமூக விவகாரங்கள், சமூக அரசியல் விவகாரங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டது.





 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.