ஓட்டமாவடி - மஜ்மா நகரில் யானை தாக்கி வயோதிபர் மரணம்

யானை தாக்கி நபரொருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் ஓட்டமாவடி - மஜ்மா நகர் பகுதியில் வைத்து (25) காலை இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி - மீராவோடை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான எஸ். எம். காசிம் என்பவர் மஜ்மா நகரிலுள்ள அவரது தோட்டத்திற்கு சென்ற போதே அவர் யானை தாக்கி மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்த நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.