கொவிட்-19 வைரஸ் குறித்து WHO வெளியிட்ட முக்கிய  அறிவிப்பு

கொவிட் -19 தொற்றுநோய் இனி உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.ஜெனீவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 வைரஸ் 2020 ஆம் ஆண்டில் பொது சுகாதார அவசரநிலையாக பிரகடனப்படுத்தப்பட்டது.சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹானை மையமாகக் கொண்டு, 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த வைரஸ் தோற்றியதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், *2020 ஆம் ஆண்டு கொவிட்-19 வைரஸ் உலகளாவிய தொற்றுநோயாக மாறியது.இருப்பினும், கொவிட்-19 சீனாவுக்கு இன்னும் தலையிடியாக* உள்ளது.

அதனை கட்டுப்படுத்த *சீனா விதித்துள்ள சுகாதாரக் கட்டுப்பாடுகள் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தளர்த்தப்பட்டு மற்றும் நீக்கப்பட்டு உள்ளன.இதன்படி, வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படவில்லை* என சீன சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், *உலகின் பிற பகுதிகளில் இந்த நிலைமை முற்றிலும் வேறுபட்டது என்றும், வெற்றிகரமான தடுப்பூசி செலுத்துகை ஊடாக கொவிட் -19 வைரஸின் தீவிரம் குறைக்கப்பட்டதன் மூலம், வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துள்ளது* என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.