26,000 புதிய ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர்

ஆசிரியர் சேவைக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை உடனடியாக நடத்தப்பட்டு 26,000 புதிய ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் இந்தக் குழு நியமிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தவிர மேலும் 6000 கல்வி பீடத்தில் பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார். 


கருத்துகள்