இலங்கை ரயில் சேவையில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளால் இன்று (02) காலை திட்டமிடப்பட்டிருந்த 11 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.​

இது தொடர்பான பிரச்சினைக்கு இன்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.​

பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக இன்றும் 60க்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் ரத்து செய்யப்படலாம் என முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.​

இதேவேளை, இன்றையதினம் கணிசமான எண்ணிக்கையிலான ரயில்கள் இரத்துச் செய்யப்படலாம் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி சேனவிரத்ன எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.​

எவ்வாறாயினும், பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ரயில்வே திணைக்களம் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.