அரச ஊழியர்களுக்கான சம்பளம் இன்று வழங்க நடவடிக்கை!

TestingRikas
By -
0

அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்குத் தேவையான நிதி, வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, அனைத்து அரச ஊழியர்களுக்குமான இந்த மாத சம்பளத்தை இன்று(25) வழங்க முடியும் என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். 

இதனிடையே, அநீதியான வரிக் கொள்கைக்கு எதிராக இன்றைய தினமும் கறுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 

தொழில்வல்லுநர்களின் 15 தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் இணைந்து இந்த எதிர்ப்பு வாரத்தை முன்னெடுத்து வருகின்றன. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)