சாய்ந்தமருது  அல்ஹிலாலில் வித்தியாரம்ப விழா


சாய்ந்தமருது  அல்ஹிலால் வித்தியாலயத்தின் தரம் ஒன்றுக்கு புதிய மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா பாடசாலையின் அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் பாடசாலை ஆராதனை மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண மாகாண கணக்காய்வுத் திணைக்களத்தின் பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் எச்.எம்.எம். றசீட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு, சாய்ந்தமருது கோட்டக்கல்வி அலுவலக கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ மலிக் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டார். 

தரம் ஆண்டு மாணவர்களால் புதிய மாணவர்கள் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்கப்பட்டனர்.

அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர் உட்பட ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர், பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் நலன் விரும்பிகள் முதலாம் தரத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள புதிய மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.