⏩ பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ள 225 பேரும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பங்களித்துள்ளனர்...

⏩ எனவே ஒரே ஒரு அரசை மட்டும் குறை கூறுவதில் அர்த்தமில்லை...

⏩ எதிர்க்கட்சிக்கு எந்த நோக்கமும் இல்லை, எல்லாவற்றுக்கும் குற்றம் சாட்டுகி ன்றனர்...

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

நீண்ட காலமாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய 225 பேரும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பங்களிப்பு செய்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் ஒரேயொரு அரசாங்கத்தை மட்டும் குறை கூறுவதில் அர்த்தமில்லை என அமைச்சர் கூ றினார்.

பாராளுமன்றத்தில் இன்று (6) எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா (ஸ்ரீ.பொ. பெ) - கெளரவ சபாநாயகர் அவர்களே, சனிக்கிழமை எதிர்க்கட்சிகளின் உரைகள் இடைநிறுத்தப்பட்டன. அதன் பின்னர் மகிந்த அமரவீர அமைச்சரின் வைபவத்திற்குச் சென்ற ஜனாதிபதி நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க எதிர்க்கட்சியினரை இணைந்து கொள்ளுமாறு கூறினார். நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களைக் கண்டறிய நியமிக்கப்பட்ட குழுவிலhவது தாம் ஜனாதிபதிக்கு மிகவும் நேர்மையானவர் என்பதை காட்ட முடியும். ஆளும் கட்சிக்குச் செல்லக் எதிர்பார்த்திருப்பவர்கள் இங்கு அமர்ந்து நன்மதிப்பை எடுக்க முயல்கின்றனர். எனவே இதை நேர்மையாகச் செய்ய முடிந்தால் செய்வோம். இல்லாவிட்டால் விட்டு விடுவோம்.

நியமிக்கப்பட்ட உறுப்பினர் மொஹமட் முஸம்மில் (ஸ்ரீ.பொ.பெ) - கெளரவ சபாநாயகர், போதைப்பொருள் பரவலை மேலும் தடுப்பதற்கு குழுவிற்கு முன்மொழிந்தவர்  அமைச்சர் ஜயந்த சமரவீர. ஆனால் அந்த பெயர் சேர்க்கப்படவில்லை. கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தப் பெயர்கள் முன்மொழியப்படுவதாகச் சொன்னீர்கள். ஆனால் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 13 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சித் தலைமைக் கூட்டத்தில் பிரதிநிதித்துவம் இல்லை. அதனால் அங்குள்ள விஷயங்கள் எங்களுக்குத் தெரியாது. கட்சித் தலைவர் கூட்டத்தின் அளவை அதிகரிக்க எதிர்க்கட்சித் தலைவரும், சபாநாயகரும் ஒப்புக்கொண்டனர். ஆனால் அந்த ஒப்பந்தம் நடைபெறவில்லை. அதற்காக நாங்கள் வருந்துகிறோம்.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (ஸ்ரீ.பொ.பெ) - இந்த நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது உதவுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தோம். ஆனால் சில சமயங்களில் எதிர்க்கட்சிகள் தங்கள் சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துகின்றன. வரி யைக் குறைக்கும் போதும் ஏசுகிறார்கள். அதிகரித்தாலும; ஏசுகிறார்கள். அந்த நபர்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. ஒரு அரசாங்கம் மட்டுமல்ல, கடந்த காலங்களில் இருந்த நாட்டின் 225 பிரதிநிதிகளும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பங்களித்துள்ளனர். எனவே, திருடனின் தாயிடம் கேட்டும் பயனில்லை. இதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் சபையின் பணிகளைத் தொடருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

2023.07.06

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.