இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று அறிவித்துள்ளார். 

(மாலை மலர்)


மிக நீண்ட காலமாக திஹாரிய தூல்மலை பிரதேசத்தில் இருந்து வந்த குடிநீர் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் முகமாக பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கினங்க பிரதேச சபை உறுப்பினர் இர்ஷானினதும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவினது வேண்டுகோளுக்கிணங்க,  நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் அல்ஹாஜ் ரவுப்(f) ஹகீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்த பிரதேசத்திற்கான குடிநீர் விநியோக வேலைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன...









ஐ.நா. இன் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் இலங்கைக்கான பிரதிநிதி ஜோர்ன் ஸொரென்ஸன் (Jorn Sorenson) மற்றும் ஐ.நா. இன் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் திருமதி ஹனா ஸிங்கர் ஆகியோர் நேற்றைய தினம் (27) பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களை அவரது அமைச்சில் சந்தித்தார்கள். 

இலங்கையானது விரைவான காலநிலை மாற்றங்களுக்கு உள்ளாகும் ஒரு நாடு என்று ஐ.நா. அறிந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் வெள்ளம் போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில், இலங்கைக்குத் தேவைப்படும் உதவிகளை செய்வதாகவும் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மற்றும் அரச சேவையின் தரத்தினை உயர்த்துவதற்கு ஐ.நா. இன் அபிவிருத்தி வேலைத்திட்டங்களால் செய்ய முடியுமான பங்களிப்புக்கள் பற்றியும் உரையாடப்பட்டது. இதன் போது அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

(கஹட்டோவிட்ட ரிஹ்மி)


இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி
நிறுவனத்தின் கிளை நிந்தவூரில்
==================================
பைசல் காசிம் நடவடிக்கை 
.....................................................................
தொழில் நுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா [HND] பாடநெறிகளை வழங்கி வரும் இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அதன் கிளையை நிந்தவூரில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

சுகாதார இராஜாங்க அமமைச்சர் பைசல் காசிம் இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் கே.டி.ஏ.உதயங்க ஹேமபாலவை இன்று சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடினார்.

கிழக்கு மாகாண மாணவர்களின் நலன் கருதி இந்த நிறுவனத்தின் உதவி தேவைப்படுவதாக பைசல் காசிம் அவரிடம் கூறினார்.அந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக எவ்வாறான நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிறுவனத்தின் கிளையை நிந்தவூரில் நிறுவி முழுக் கிழக்கு மாகாணத்துக்கும் விரிவான கல்வியை வழங்குவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு பைசல் காசிம் அதன் பணிப்பாளரிடம் வேண்டுகோள்விடுத்தார்.

இராஜாங்க அமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பணிப்பாளர் உதயங்க இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி
நிறுவனம் உயர் கல்வி அமைச்சின் கீழ் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

[ஊடகப் பிரிவு]


வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க, நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா மற்றும் முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகர ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். 

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (28) கொழும்பு நீதவான் நீதிமன்றில் மேலதிக நீதவான் இசுறு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது. 

இன்றைய விசாரணையின் போது, குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்ற நாளன்று அலரி மாளிகையில் இருந்து சென்ற 04 வாகனங்கள் மற்றும் அவற்றின் பயணங்கள் சம்பந்தமாக விசாரணை செய்யப்படுவதாக பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பாளர்களாக கடமையாற்றிய இராணுவ மற்றும் கடற்படை அதிகாரிகள் சிலரின் பயணங்கள் சம்பந்தமாகவும் விசாரணை செய்யப்படுவதாக கூறிய பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல், அவர்களின் பயணங்கள் சம்பந்தமாக உத்தியோகபூர்வ பதிவறிக்கையை கண்டுபிடிக்க முடியாதிருப்பதாக கூறினார். 

அதேநேரம் உயிரிழந்த வசீம் தாஜுதீனின் தொலைபெசி மற்றும் கணினி ஊடாகவும் விசாரிக்கப்பட்டதாகவும், அவற்றின் ஊடாக முக்கியமான தரவுகளை கண்டறிய முடியவில்லை என்றும் பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் கூறினார். 

எவ்வாறாயினும் இந்த விசாரணைகளுக்கு அமைவான சாட்சிகளை கண்டறிவதில் உள்ள முன்னேற்றம் மிகவும் மந்தகதியில் இருப்பதாக நீதவான் இசுறு நெத்திகுமார திறந்த நீதிமன்றில் கூறினார். 

அதன்படி விசாரணை நடவடிக்கையை விரைவாக நிறைவு செய்யுமாறும், பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் முறைப்பாட்டாளருக்கு உத்தரவிட்டார். 

இதனையடுத்து வழக்கை ஜூன் 27ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் அன்றைய தினம் விசாரணைகள் சம்பந்தமான முன்னேற்ற அறிக்கையை சமர்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.



( மினுவாங்கொடை நிருபர் )

   அவசர திருத்த வேலை காரணமாக,  கொழும்பின் பல பகுதிகளில் (02) சனிக்கிழமை  இரவு 9.00 மணி முதல் (03) ஞாயிறு பிற்பகல் 3.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படுமென,  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
   இதற்கமைய,  கொட்டாஞ்சேனை, கிறேண்ட்பாஸ். மட்டக்குளி (கொழும்பு 13,14,15) ஆகிய பகுதிகளில், இந்நாட்களில்  நீர்வெட்டு அமுலில் இருக்குமென சபை அறிவித்துள்ளது.
   குறித்த காலப்பகுதியில்,  கொழும்பு -  கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
   குடிநீர் விநியோகத் திட்டம் மற்றும் கழிவுநீர் செயற்றிட்டம் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாகவே, நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் மேலும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )


கண்டி மற்றும் மாவ­னெல்லை ஆகிய பிர­தான நக­ரங்­களை அண்­மித்த பகு­தி­களில் ஒரே இரவில்  நான்கு இடங்­களில் புத்தர் சிலைகள் அடித்து சேத­மாக்­கப்­பட்ட  விசா­ர­ணை­களில் ஓர் அங்­க­மாக புத்­தளம் – வணாத்­த­வில்லு பகு­தியில் பெருந்­தொகை வெடி­பொ­ருட்கள் சி.ஐ.டி.யினரால் மீட்­கப்­பட்­டன. இந்த வெடி­பொ­ருட்­களை வணாத்­த­வில்லு – லக்டோ தென்­னந்­தோப்­புக்கு எடுத்துச் செல்லப் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாகக் கூறப்­படும்  என்.டப்­ளியூ. பி.ஏ. 2855 எனும் வெள்ளை வேனை சி.ஐ.டி.யினர் கைப்­பற்­றி­யுள்­ளனர். வெடி­பொருள் கடத்­தலின் பின்னர் குறித்த வேன்  கடந்த ஜன­வரி 20 ஆம் திகதி பிறி­தொ­ரு­வ­ருக்கு விற்­பனை செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில், கெக்­கு­னு­கொல்ல பகு­தியில் வைத்து சி.ஐ.டியி­னரால் கைப்­பற்­றப்­பட்­ட­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விஷேட விசா­ரணை அறை உப பொலிஸ் பரி­சோ­தகர் டயஸ் மாவ­னெல்லை நீதிவான் உபுல் ராஜ­க­ரு­ணா­வுக்கு நேற்று அறி­வித்தார்.

அத்­துடன் குறித்த வேனை அரச இர­சா­யன பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்­தவும் இதன்­போது அவர் நீதி­வா­னிடம் அனு­மதி பெற்­றுக்­கொண்டார்.

புத்தர் சிலை உடைப்பு விவ­காரம் குறித்த வழக்கு  நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது மாவ­னெல்லை பொலிஸ் நிலை­யத்தின் பொலிஸ் பரி­சோ­தகர் ரண­சிங்க மற்றும் சி.ஐ.டி.யின் உப­பொலிஸ் பரி­சோ­தகர் டயஸ் உள்­ளிட்ட குழு­வினர் விசா­ர­ணை­யா­ளர்கள் சார்பில் ஆஜ­ரா­கினர்.

முதலில் நேற்று வழக்கு விசா­ர­ணைக்கு வந்­த­போது, சி.ஐ.டி. தடுப்புக் காவ­லி­லுள்ள வணாத்­த­வில்­லுவில் வைத்து கைது செய்­யப்­பட்ட  4 சந்­தேக நபர்­க­ளான மொஹம்மட் ஹனீபா முபீன், மொஹம்மட் ஹமாஸ், மொஹம்மட் நக்பி, மொஹம்மட் நளீம் ஆகியோர் மன்றில் ஆஜர் செய்­யப்­ப­ட­வில்லை. அவர்கள் தடுப்புக் காவலில் வைத்து விசா­ரிக்­கப்­ப­டு­வதால் இவ்­வாறு ஆஜர் செய்­யப்­ப­ட­வில்லை.  எனினும்  விளக்­க­ம­றி­யலில் உள்ள பெண் ஒருவர் உள்­ளிட்ட 13 சந்­தேக நபர்­களில் 12 பேர் மட்­டுமே மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். ஐந்­தா­வது சந்­தேக நபர், அம்மை நோய் கார­ண­மாக வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெறு­வ­தாக சிறை அதி­கா­ரிகள் நீதி­மன்­றுக்கு அறி­வித்­தனர்.

இத­னை­ய­டுத்து மேல­திக விசா­ரணை அறிக்­கையை முதலில் சமர்ப்­பித்த மாவ­னெல்லை பொலிஸ் நிலை­யத்தின் பொலிஸ் பரி­சோ­தகர் ரண­சிங்க, தாம் முன்­னெ­டுக்கும் அனைத்து விசா­ர­ணை­க­ளையும் சி.ஐ.டி.யிடம் இன்று முதல் (நேற்று) கைய­ளிப்­ப­தாக அறி­வித்தார்.

இந்­நி­லையில் குற்­ற­வியல் சட்­டத்தின் 125 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் விசா­ர­ணை­களை சம்­பூ­ர­ண­மாகப் பொறுப்­பேற்ற சி.ஐ.டி. அச்­சட்­டத்தின் 124 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் விசா­ர­ணை­க­ளுக்­கான உத்­த­ர­வு­க­ளையும் பெற்­றுக்­கொண்­டது.

இதன்­போது மன்­றுக்கு விசா­ர­ணை­களை தெளி­வு­ப­டுத்­திய சி.ஐ.டி., இந்த விவ­கா­ரத்தின் பிர­தான இரு சந்­தேக நபர்­க­ளாக கரு­தப்­படும் (சாதிக் அப்­துல்லா, சாஹித் அப்­துல்லா) இரு­வ­ரையும் தேடி விசா­ர­ணைகள் தொடர்­வ­தாக சுட்­டிக்­காட்­டி­யது. அவர்கள் இருப்­பி­டங்­களை விட்டு தலை­ம­றை­வாகி, அடிக்­கடி ஒவ்­வொரு இடங்­க­ளுக்கு மாறிக்­கொண்­டி­ருப்­ப­தாகத் தகவல் கிடைத்­துள்­ள­தா­கவும் அதனை மைய­ப்ப­டுத்தி விசா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும்  சி.ஐ.டி. தெரி­வித்­தது.

அத்­துடன் கைதாகி விளக்­க­ம­றி­ய­லி­லுள்ள சந்­தேக நபர்கள் பிர­தான சந்­தேக நபர் தொடர்பில் தக­வல்­களை அறிந்­தி­ருந்தும் அவர்கள் மறைப்­ப­தாக சி.ஐ.டி. குறிப்­பிட்­டது.

இந்­நி­லையில்  சிறைச்­சா­லையில் வைத்து முதல் நான்கு சந்­தேக நபர்­க­ளிடம் மட்டும் மேல­திக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் டயஸ் நீதி­வா­னுக்கு கூறினார்.

இதன்­போது முதல் நான்கு சந்­தேக நபர்கள் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி, தமது சேவை பெறுநர் சி.ஐ.டி.யினரின் விசா­ர­ணையின் போது அச்­சு­றுத்­தப்ப்ட்­ட­தா­கவும் தாக்­கப்­பட்­ட­தா­கவும் குற்றம் சுமத்­தினார்.  சிறைச்­சாலை அதி­கா­ரியின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் விசா­ரணை செய்­யவே நீதி­மன்றம் அனு­ம­தித்­த­தா­கவும் எனினும், தமது சேவை பெறு­நர்கள் விசா­ர­ணை­களின் போது, சி.ஐ.டி. அதி­கா­ரி­களால் அச்­சு­றுத்­தப்படுள்­ளமை நியா­ய­மான விசா­ர­ணைகள் தொடர்பில் கேள்வி எழு­வ­தாக  அந்த சட்­டத்­த­ரணி சுட்­டிக்­க­ட­டினார்.

பிர­தான இரு சந்­தேக நபர்­களை கடந்த மூன்று மாதங்­க­ளாகப் பிடிக்­காமல்  கைதா­கி­யுள்ள இவர்கள் மேல் முழுப் பழி­யையும் சுமத்த சி.ஐ.டி. முயற்­சிப்­ப­தாக அவர் கூறினார்.

'பிர­தான சந்­தேக நபர்­களை கைது­செய்ய சி.ஐ.டி. என்ன விசா­ர­ணை­களை நடாத்­தி­யது.  அவர்கள் இருப்­பி­டங்­களை மாற்றி மாற்றி வரு­வ­தாகக் கூறு­கின்­றனர். அது தொடர்பில் விசா­ரித்­தார்­களா? அவர்கள் செல்லும் வாக­னங்­க­ளை­யேனும் கைப்­பற்­றி­னரா? எவையும் நடக்­க­வில்லை' என அந்த சட்­டத்­த­ரணி பிர­தான சந்­தேக நபர்கள் தொடர்பில் முன்­னெ­டுக்­க­பப்டும் விசா­ர­ணை­களின் மந்­த­கதி தொடர்பில் அதி­ருப்தி வெளி­யிட்டார்.

எவ்­வா­றா­யினும் விசா­ர­ணை­களின் போது சந்­தேக நபர்­களை அச்­சு­றுத்­தி­ய­தாக முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்டை சி.ஐ.டி. மறுத்­தது. பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் சார்பில் மாவ­னெல்லை நீதி­மன்றின்  சட்­டத்­த­ர­ணிகள் அனை­வரும் முன்­னி­லை­யா­காத நிலையில்,  விசா­ர­ணை­களின் போது அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டி­ருப்பின் சிறைச்­சா­லைகள் சட்­டத்தின் பிர­காரம் சிறை அத்­தி­யட்­சகர், ஆணை­யா­ள­ரிடம் முறை­யி­ட­லா­மென அவர்கள் சுட்­டிக்­க­ட­டினர்.

எனினும் அவ்­வாறு எந்த முறைப்­பாடும் நேற்­று­வரை கிடைக்­க­வில்­லை­யென சிறை அதி­காரி ஒருவர் நீதி­வா­னுக்கு தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து, பிர­தான சந்­தேக நப­ராகக் கருதித் தேடப்­படும் சாதிக் அப்­துல்லா, சாஹித் அப்­துல்லா ஆகிய சகோ­த­ரர்­க­ளுக்கு தங்க இட­ம­ளித்­த­தாக கூறி மாவ­னெல்லை பொலி­ஸாரால் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கம்­பொளை – உலப்­பனை பகு­தியைச் சேர்ந்த பெண் ஒருவர் உள்­ளிட்ட இருவர் கைது செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் அவர்கள் சார்பில் சட்­டத்­த­ரணி தெஹ்லான் ஆஜ­ரானார். அவர், குறித்த பெண்­ணை­யேனும் பிணையில் விடு­விக்­கு­மாறும்,. இந்தக் குற்­றங்கள் தொடர்­பிலோ அதனைச் செய்த பிர­தான சந்­தேக நபர்கள் தொடர்­பிலோ  குறித்த பெண் எத­னையும் அறிந்­தி­ருக்­க­வில்லை என சுட்­டிக்­காட்டி வாதிட்டார்.  அதனால் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் அவ­ருக்கு எதி­ராக சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டு நியா­ய­மற்­றது எனவும் கூறினார்.

எனினும், முன்­வைக்­கப்­பட்ட அனைத்து விட­யங்­க­ளையும் ஆராய்ந்த நீதிவான்  அவற்றை பதிவு செய்­து­கொள்­வ­தாக அறி­வித்­த­துடன், குறித்த பெண்­ணுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 3 (ஆ) பிரிவின் கீழ் உள்­ளதால் தனக்கு பிணை­ய­ளிக்கும் அதி­காரம் இல்லை என சுட்­டிக்காட்டி பிணை விண்­ணப்­பத்தை நிரா­க­ரித்தார்.

அதன்­படி அக்தாப், முப்தி, முனீப், இர்ஷாத், அஸீஸ், முஹம்மட் பெளஸான்,  முஸ்­தபா மொஹம்மட் பயாஸ், பயாஸ் அஹமட்,  மொஹம்மட் இப்­ராஹீம், ஆகில் அஹமட், அப்துல் ஜப்பார் பதுர்தீன், சித்தி நஸீரா இஸ்­ஸதீன் ஆகிய 13 பேரையும் எதிர்­வரும் மார்ச் 13 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­த­ர­விட்டார்.

கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி அதி­காலை நேரத்தில் குரு­நாகல் மாவட்டம் பொது­ஹர பொலிஸ் பிரிவின் கட்­டு­பிட்­டிய வீதியில்  கோண்­வல பகு­தியில் அமை­யப்­பெற்­றுள்ள ஆலயம் ஒன்றில் இந்து கட­வுள்­களைக் குறிக்கும் உரு­வச்­சி­லைகள் அடை­யாளம் தெரி­யா­தோரால் அடித்து நொறுக்கி சேத­மாக்­கப்­பட்­டன.  இந்த சம்­பவம் தொடர்பில் பொது­ஹர பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அதா­வது, கடந்த 2018 டிசம்பர் 26 ஆம் திகதி இத­னை­யொத்த ஒரு சம்­பவம் யட்­டி­நு­வர – வெலம்­பட  பொலிஸ் பிரிவில் பதி­வா­னது.

அதி­காலை 3.00 மணி­ய­ளவில் வெலம்­பட பொலிஸ் பிரிவின் லெயம்­க­ஹ­வல பகு­தியில் மூன்­றரை அடி உய­ர­மான புத்தர் சிலை அடை­யாளம் தெரி­யா­தோரின் தாக்­கு­த­லுக்­குள்­ளா­னது. அத்­துடன் அந்த மூன்­றரை அடி உய­ர­மான புத்தர் சிலை சேதப்­ப­டுத்­தப்­படும் அதே­நேரம் அதனை அண்­டிய பகுதியில் இருந்த மேலும் மூன்று சிறு சிலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில்  அதேதினம்  அதிகாலை 4.00 மனியளவில்  மாவனெல்லை – திதுருவத்த சந்தியிலுள்ள புத்தர் சிலையும் தாக்கி  சேதபப்டுத்தப்பட்டுள்ளது. இதன்போதுதான் இந்த சிலை உடைப்பு விவகாரத்தில் அல்லது இவ்வருவருக்கத்தக்க சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தடயமும் கிடைத்திருந்தது.

திதுருவத்த சந்தியில் புத்தர் சிலையை தாக்க  மோட்டார் சைக்கிளில்  இருவர் வந்துள்ளனர். இவ்வாறு வந்ததாகக் கூறப்படும் இருவரில் ஒருவரை பிரதேசவாசிகள் துரத்திப் பிடித்து மாவனெல்லை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அது முதல் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே தற்போது அவ்விடயத்தில் பல அதிர்ச்சியளிக்கும் விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-விடிவெள்ளி


தர்கா நகரில் பௌத்த பிக்கு ஒரு­வ­ரையும் அவ­ரது சார­தி­யையும் அளுத்­க­மையில் வைத்து தாக்கி காயங்­க­ளுக்­குள்­ளாக்­கி­ய­தாக மூன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்த வழக்கில் மூவ­ரையும் குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்து விடு­வித்­த­துடன் அவர்கள் குற்­ற­வா­ளிகள் அல்ல  என்றும் களுத்­துறை நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி சந்­திமா எதி­ரி­மான நேற்று தீர்ப்பு வழங்­கினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி குருந்­து­வத்தை ஸ்ரீ விஜே­ராம விகா­ரையின் பிர­தம குரு அய­கம சமித்த தேர­ரையும் அவ­ரது சார­தி­யான விஸ்­வா­வையும் தாக்கி காயங்­க­ளுக்­குள்­ளாக்­கி­ய­தாக மௌலவி அஸ்கர் மற்றும் அவ­ரது சகோ­த­ரர்­க­ளான அர்சாத், அப்லால் ஆகியோர் மீது இந்த வழக்கு  களுத்­துறை நீதிவான் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

குற்றம் சுமத்­தப்­பட்ட மூன்று முஸ்­லிம்­களின் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.சுஹைர் தலை­மையில் சட்­டத்­த­ர­ணி­க­ளான மொஹமட் இஸ்ஹார், எம்.ஐ.எம்.நளீம், எம்.அஸ்லம் ஆகியோர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். சமித்த தேரரின் சார்பில் சட்­டத்­த­ரணி பெவின் குமா­ர­சிறி ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

வழக்­குடன் தொடர்­பான சாட்­சி­யங்கள் நம்­ப­க­ர­மாக இன்­மையால் மூவ­ரையும் குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்தும் விடு­விப்­ப­தாக களுத்­துறை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் தெரி­வித்தார்.

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி அளுத்­க­மையில் ஒரு ஒழுங்­கையில் மூன்று முஸ்­லிம்­க­ளுக்கும், அய­கம சமித்த தேரரின் சார­திக்கும் இடையில் ஏற்­பட்ட வாக்­கு­வா­த­மொன்றே ஒரு தாக்­கு­த­லாக சித்­தி­ரிக்­கப்­பட்­டது. பௌத்த குரு தாக்­கப்­பட்­ட­தாக தவ­றான செய்­திகள் சமூக வலைத்­த­ளங்கள் மூலம் பரப்­பப்­பட்­டன.

பொது­பல சேனா அமைப்பு மற்றும் சிங்­கள ராவய அமைப்பும் இந்தச் சம்­ப­வத்தை பெரி­து­ப­டுத்தி துண்டுப் பிர­சு­ரங்கள் வெளி­யிட்­ட­துடன் பொதுக் கூட்­டத்­தையும் பேர­ணி­யையும் ஏற்­பாடு செய்து வன்­மு­றை­களைத் தூண்­டின. இந்தச் சம்­ப­வமே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அளுத்­க­மை­யிலும், பேரு­வ­ளை­யிலும் வன்­செ­யல்கள் உரு­வா­கு­வ­தற்கு கார­ணமாய் அமைந்­தன.

அளுத்­கமை, பேரு­வளை வன்­செ­யல்­களில் மூவர் உயி­ரி­ழந்­த­துடன் பல கோடி ரூபா பெறு­ம­தி­யான முஸ்­லிம்­களின் சொத்­து­களும் அழி­வுக்­குள்­ளா­கின.

இந்த வழக்கில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.சுஹைர் கருத்து தெரிவிக்கையில் 'நடந்திராத ஒரு சம்பவம் நடந்ததாக பதிவானால் அது முஸ்லிம் சமூகத்துக்கு பாதிப்பாக அமையும். தேரரும், சாரதியும் தாக்கப்படவில்லை. வாக்குவாதமே இடம்பெற்றது என்பதை எம்மால் நிரூபிக்கக் கூடியதாக இருந்தது' என்றார்.


அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் இடையிலான இரண்டாவது உச்சிமாநாடு வியட்நாமில் நடைபெற்றது. 

இந்நிலையில் இரு நாட்டு தலைவர்கள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகவில்லை என்று வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.

எனினும் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்பில் ஈடுபடுவதற்கான திட்டங்கள் குறித்து இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.


அலுகோசு பதவிக்காக 102 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்கள் கடந்த 25 ஆம் திகதி வரையில் கோரப்பட்டதுடன் வெளிநாட்டவர் ஒருவரும் இதற்காக விண்ணப்பித்து இருந்ததாக அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் வெளிநாட்டவரின் விண்ணப்பம் பரிசீலனைக்கு உட்படுத்தாமலே நிராகரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஏனைய விண்ணப்பங்கள் தொடர்பான பரிசீலனை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பரிசீலனையின் பின்னர் நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 

போதைப்பொருள் வர்த்தகம் காரணமாக தண்டனை பெற்று சிறைச்சாலையில் இருந்துகொண்டு போதைப்பொருள் வர்த்கத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி கூறியிருந்த நிலையில் அதனை நிறைவேற்றுவதற்காக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்களை கோரியிருந்தது. 

போதைப்பொருள் வர்த்தகம் காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட 48 பேர் இந் நாட்டு சிறைச்சாலைகளில் இருப்பதுடன் அதில் கண்டிப்பாக மரண தண்டனை விதிக்கப்படும் 17 பேரும் இருப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.


பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை பொது வெளியில் வெளிப்படுத்துவதற்கு தன்னிச்சையாக முன்வந்துள்ளனர். 

பாராளுமன்ற உறுப்பினர்கள் தாரக பாலசூரிய, வாசுதேவ நாணயக்கார, எம்.ஏ. சுமந்திரன், விதுர விக்கிரமநாயக்க மற்றும் அமைச்சர் எரான் விக்கிரமரத்ன ஆகியவர்களே இவ்வாறு நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்காக முன்வந்துள்ளனர். 

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் கடந்த பல ஆண்டுகளாக சொத்துக்கள் பற்றிய விபரங்களை பொது வெளியில் கொண்டுவருவதற்கான பிரச்சாரங்களை மேற்கொண்டது. பிரதிநிதிகளின் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் திடமாக நிச்சயப்படுத்துவதற்கு ஏதுவாக அமையும். வெளிப்படுத்தப்பட்ட சொத்து விபரங்களை றறற.வளைசடையமெய.ழசபஃஆPயளளநவள இல் பார்வையிடலாம். 

இவ்வரலாற்று நிகழ்வில் உரையாற்றி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேக்கர தமது சொத்துக்கள் பற்றிய விபரங்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதற்காக முன்வந்த 5 பாராளுமன்ற உறுப்பினர்களையும் வரவேற்பதுடன் அரசியல்வாதிகளின் சொத்துவிபரங்களை பொதுத்தளத்தில் வெளியிடுமாறு கோரி மேற்கொண்ட பிரச்சாரத்தின் மைல்கல்லாக கருதுகின்றோம். 

இந்த செயற்பாடானது ஏனைய மக்கள் பிரதிநிதிகளையும் தமது சொத்து விபரங்களை வெளிப்படுத்துவதற்கு ஊக்குவிப்பதுடன் கேள்விகள் இன்றி பொது நலன் என்ற அடிப்படையில் தகவல்களை வழங்குவது அவசியம் என குறிப்பிட்டார். 

ஒபேசேக்கர இது தொடர்பாக மேலும் கூறுகையில், இது வெளிப்படையான பாராளுமன்றத்தை காட்டுவதுடன் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதாகவும் அமைவதுடன் மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குமிடையிலான இடைவெளியைக் குறைக்கும். தகவல்கள் பொதுமக்களின் கரங்களில் சென்றால் நல்லாட்சியின் திறவுகேளாகும் என்பதுடன் ட்ரான்ஸ்பேரன்சி இன்டெர்னஷனலின் நீண்டகால நிலைப்பாடும் இதுவேயாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



இப்படியும் நியூஸ் போடுங்கடா

பாகிஸ்தானின் வான் பரப்பை மூடிய பெட்சீட்டை தூக்கி எறிந்து திறந்து வைக்க மோடி உத்தரவு...அத்தனை பெரிய பெட்சீட்டைத் தேடி இந்திய ராணுவம் வேட்டை..

இந்தியா ஏர்போர்ஸில் இணைகிறார் தோனி..பாகிஸ்தானை அசரவைக்கப் போவதாய் கர்ஜனை..அப்ரிடி ஒப்பாரி வைத்து அழுதார்.

யுத்தம் வந்தால் இந்தியா பாகிஸ்தானைக் கைப்பற்றும் என்று  முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த வி.ஐ.பீக்கள் தப்பியோடிக் கொண்டு இருக்கின்றனர்.. கிரிக்கட் விளையாடும் காலத்தில் இந்தியாவுக்கு சிம்மசொப்பனமாய் விளங்கிய கேட்டன் சர்மாவின் கடைசிப் பந்துக்கு சார்ஜாவில் சிக்ஸர் அடித்து இந்தியாவைத்  தூற்றிய பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஜாவிட் மியண்டாட் சற்று முன்னர்  தப்பியோட்டம்.எமிரேட்ஸ் விமானத்தில் டுபாய் சென்றதால் பரபரப்பு..

இந்தியாவில் அத்தனை பள்ளிக் கூடங்களிலும் இருக்கும் உலக வரைபடத்தில் இருந்து பாகிஸ்தான் வெட்டி அகற்றப்பட்டது. முஹம்மட் அலி ஜின்னாவின் கனவைக் கொன்றுவிட்டோம் என்று மோடி பெருமிதம்..ஆமித் ஷா பாராட்டு...

பஞ்சாப் சிங்கம் ஹர்பஜன் சிங் பஞ்சாப் எல்லைக்கு வந்து கர்சித்தார்..இந்தக் கர்ஜனை லாகூர் வரை கேட்டதாகவும் மக்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடியதாகவும் பாகிஸ்தானின் டான் பத்திரிகை செய்தி வெளியிட்டு இருக்கிறது...

கதறியழுதபடி மோடிக்கு டெலி போன் செய்தார் இம்ரான் கான்..மோடி அதைக் கட் பண்ணி ரிஸீவரை ஓங்கி அடித்தார்..சுற்றி இருந்தவர்கள் கை தட்டி ஆரவாரம்..டெலிபோன் உடைந்து நொறுங்கியது..பாகிஸ்தானுக்கும் டெலிபோனுக்கு நடந்த கதியே ஏற்படும் என்று அறிவிப்பு...பாகிஸ்தான் கைப்பற்றப்பட்டதும் அகண்ட இந்தியாவாகிடும்.அதற்கும் சேர்த்து பிரதமராய் இருந்து கொள்ள மோடிக்கு கெபினட் விசேட அனுமதி..

பாகிஸ்தான் கைப்பற்றப்பட்டதும் அங்கே இருக்கும் மாடுகளை அழைத்து வர விசேட விமானங்கள் தயாராகின..முதல் விமானத்தில் பைலட்டாக  மோடியும் கோ பைலட்டாக உத்தரப் பிரதேஷ முதல்வர் யோகி ஆதித்தியநாத்தும் இருப்பார்கள்.ஏர்ஹோஸ்டாக தமிழிசை இருப்பார் .

காஷ்மீருக்கு யுத்தத்திற்கு செல்ல தமிழ் நாட்டில் இருந்து ஒரு படை அதிரடியாகத் தயார்..அனைவருக்கும் விஜய் காந்த் இன் படங்களைப் பார்க்குமாறு மோடி தடலாடி உத்தரவு.

திபெத், இந்தியாவின்  லடாக் வழியாக காஷ்மீர் , பாகிஸ்தானின் வடமேற்கு மாநிலங்கள் வழியாகப் பாயும் பிரசித்தி பெற்ற சிந்து நதியைப் பாகிஸ்தானுக்கு செல்லவிடாமல் தடுக்க அத்தனை ஏற்பாடுகளும் பூர்த்தி..முழு நதியையும்  உறிஞ்சிக் குடிக்க அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் தண்ணீர்ப் படை ஹிமாச்சல் மாநிலத்திற்கு விரைந்தது..இந்தத் திட்டம் சொதப்பினால் மூத்திரம் பெய்து நாசப்படுத்தும் பலே திட்டமும் தயார்..அதிர்ச்சியில் இம்ரான் கான்..

கண்ணீர் மல்க பாகிஸ்தான் இளம் பெண்கள் அனுப்பிய  மின்னஞ்சல்களால் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க் இற்கு மாரடைப்பு..." இந்தியர்கள் அவர்களின் ப்ரொபைலுக்கு அங்ரி ரியாக்‌ஷன் போடுவதாய் அதிரடி புகார் ".


நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வியில் சமமான அந்தஸ்த்தினை வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 'அண்மையிலுள்ள பாடசாலை – சிறந்த பாடசாலை' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 3,937.31 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட 197 அபிவிருத்தி திட்டங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 01ம் திகதி மாணவர் மயப்படுத்தப்பட உள்ளன.

ஒரே தினத்தில் இவ்வாறான அதிக அளவிலான அபிவிருத்தி திட்டங்கள் மாணவர் மயப்படுத்தப்படுவது இதுவே முதன் முறையாகும்.

இத்தேசிய நிகழ்வின் பிரதான நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் குருநாகல் மாவட்டத்தினை மையமாகக் கொண்டு இடம்பெற உள்ளது. அதனடிப்படையில் குளியாப்பிட்டிய சென் ஜோசப் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இருமாடிக் கட்டிடம், குளியாப்பிட்டிய சாணாத் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கேட்போர் கூடம் மற்றும் குளியாப்பிட்டிய ஆசிரியர் பயிற்சி நிலையத்திற்கான நவீன நிர்வாக கட்டிடம் என்பவையே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட 54 தமிழ், முஸ்லிம் பாடசாலைகளில் 988.74 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மாணவர் மயப்படுத்தப்பட உள்ளன. 

குறிப்பாக இத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளுக்கு 173.27 மில்லியன் ரூபா நிதியும், கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 02 பாடசாலைகளுக்கு 29.19 மில்லியன் ரூபா நிதியும், முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 02 பாடசாலைகளுக்கு 33.12 மில்லியன் ரூபா நிதியும், மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 04 பாடசாலைகளுக்கு 79.16 மில்லியன் ரூபா நிதியும், வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 02 பாடசாலைகளுக்கு 33.12 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மாணவர் மயப்படுத்தப்பட உள்ளன. 

அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளுக்கு 180.55 மில்லியன் ரூபா நிதியும், திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 08 பாடசாலைகளுக்கு 159.22 மில்லியன் ரூபா நிதியும், அம்பாரை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 16 பாடசாலைகளுக்கு 301.11 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் இவ்வாறு மாணவர் மயப்படுத்தப்பட உள்ளன. 

மேலும், நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 09 பாடசாலைகளுக்கு 171.38 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
  





காலையில் பாடசாலை செல்வதற்காக பஸ்ஸிக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். வழமையாக என்னுடன் பஸ்ஸிற்காகக் காதுக் கொண்டிருந்த நபருடன் நடந்த உரையாடல்...
அந்த இடம் கடும் வளைவு(Bend). ஒரு வாகனத்தை இன்னொரு வாகனம் முந்த முடியாது.சட்டத்தில் இடமும் இல்லை.ஏதாவது விபத்து நடந்தாலும் முந்த முயற்சித்தவரின் தவறு என்றே கருதப்படும்.

அங்கு, விலையுயர்ந்த வாகனம் ஒன்று அந்த ஆபத்தான வளைவில் வந்த வேகத்திலே இரண்டு வாகனங்களை முந்திச் செல்கையில் மறு முனையில் வந்த ஆட்டோ மயிரிழையில் தப்பியது.

என் பக்கத்தில் இருந்தவர். இவ்வாறு கடிந்து ஏசினார்: #படித்தவர்களின் (Study)போக்கு இப்படித்தான். அடுத்தவர்களையும் இடங்களை பற்றியும் சிந்திப்பதே இல்லை.விலையுயர்ந்த வாகனத்தைக் கையில் எடுத்தால் ஏதே தலைக்கணம் வந்திடுது. நிதானமற்றவர்கள் என்றார்.

ஹும்.. நீங்கள் சொல்வது உண்மை.நான் ஏற்றுக் கொள்கிறேன். இன்று எல்லோரும் #படிக்கிறார்கள் (Study).#படித்தல் என்பது (மனனம் செய்தல், ஞாபகம் வைத்துக் கொள்ள, வாசித்தல்...) நீங்களும், நானும் படித்துள்ளோம். அதே போல் அவர் சட்ட திட்டங்களையும், (டிரபிக்)போக்குவரத்து குறியீடுகளையும் #படித்து பாஸ் ஆகி லைசன் எடுத்துள்ளார். ஆனால் #கற்றவர் அல்ல..

#கற்றவர்கள் இல்லாமல் இருப்பதுதான். அனைத்துக்குமான பிரச்சினை. #படித்ததை வாழ்வில் தேவைப்படும் இடங்களுக்கு அதனை #பிரயோகித்தல் தான் #கற்றல்.

எங்களது தவறுகளும் உள்ளன. நானும், நீங்களும் பொதுவாக அதிகமானவர்கள் புள்ளிகளுக்காகவும் சான்றிதழ்களுக்காவும்,பெயருக்குப் பின்னால் எழுத்துக்களை எழுதுவதற்காகவும் #படிப்பிக்கின்றோமே தவிர #வாழ்க்கையில் நிலமைகளின் போது எவ்வாறு பிரயோகிக்க வேண்டும் என்று #கற்றுக்கொடுக்க மறந்து விடுகிறோம்.

A Raheem Akbar
2019/02/27


எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள உணவுப் பொதியிடலுக்கான 18 ஆவது பதிப்பின் கண்காட்சித் தொடரின் அங்குரார்பண வைபவம்  மற்றும்  அதன் முந்தைய 17 ஆவது பதிப்பின் எக்ஸ்போ விருது வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்  (26) கலந்து கொண்டார்.

கொழும்பு சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை உணவு பதப்படுத்தும் சங்கத்தின் தலைவர் சரத் அலஹகோன்செயலாளர்  துசித் விஜேசிங்க, லங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவையின் பிரதமநிறைவேற்று அதிகாரி ஆசிம் முக்தார் மற்றும் இந்த துறையில் முக்கிய தொழில் பிரமுகர்கள்கலந்துக்கொணடனர்.










(அஷ்ரப் ஏ சமத்)



பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிா் கல்லுாாியின் 2016-17 ஆண்டுகளுக்கான பரிசலிப்பு வைபவம் கல்லுாாியின் அதிபா் நஸ்ரியா முனாஸ் தலைமையில் கல்லூயின் மண்டபத்தில்  நடைபெற்றது. 

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள இருந்த பேராசிரியா் மைத்திரி விக்கிரமசிங்கவின்   வாழ்த்துச் செய்தி அதிபரினால் வாசிக்கப்பட்டது.  கௌரவ அதிதியாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் கலந்து கொண்டாா்.  மற்றும் கொழும்பு வலயக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளா்களான மும்தாஜ் பேகம், கல்வியமைச்சின் உதவிக்கல்விப் பணிப்பாளா் திருமதி பிரபா செல்லத்துறை, பிரதி அதிபா்கள் ஆசிரியைகள், பெற்றாா்கள் சங்க உறுப்பிணா்கள் பழைய மாணவ அங்கத்தவா்களும் இந் நிகழ்வில்  கலந்து கொண்டனா்.

இப் பரிசலிப்பின் போது வைத்தியத்துறைக்காக களனி பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவி சிபானா ஜவ்பருக்கு கல்லுாாியின் சிறந்த திறமைக்கான விருது பாராளுமன்றனர் முஜிபு ரஹ்மான் அவா்களினால் வழங்கி வைக்க்பட்டது. அத்துடன் சகல துறை சோ் ராசிக் பரீத் விருது தௌபீக் ஆதிலாவுக்கு திருமதி பெரோஸா முசம்மிலாவினால் வழங்கி வைக்கப்பட்டது.  இந் நிகழ்வில் பிரதி அதிபா்களான ரஸ்மியா அபுபக்கா், வி.செல்வநாயகம், அக்கீதா நுஹ்மான் ஆகியோரும் பரிசலிப்பு வைபவத்தில் கலந்து கொண்டனா்.

இங்கு உரையாற்றிய பா.ம. உறுப்பினர்  முஜீப் ரஹ்மான் -

இக் கல்லுாாியில்  4000 மாணவிகளும், 150 ஆசிரியைகளையும் கொண்டு தலைநகரில் முஸ்லிம்களுக்கென உள்ள ஒரே ஒரு மகளிா்  தேசிய பாடசாலையாக முஸ்லிம் மகளிா் கல்லுாாி விளங்குகின்றது.  இலங்கையின்  அரச தனியாா்  நிர்வாகத்தில் 60 வீதமாக பெண்களே உயா்  பதவி தொட்டு சாதாரண பதவிகளையும்  சேவையாற்றி வருவதை காணக்கூடியாதாக உள்ளது. பெண்கள்  கல்வியில் பெரிதும் முன்னேற்றம் கண்டு சிறந்த நிர்வாகிகளாக  விளங்குகின்றனா். 

ஆசிரியா் சேவையிலும்  ஆண்கள் பாடசாலைகளிலும் கூட 60 வீதமாக  ஆசிரியைகளே உள்ளனா். ஆகவே தான் பெண்கள் தொழில் ரீதியாக மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் சிறந்து மக்கள் பிரநிதியாகவும் வரல் வேண்டும். இக் கல்லுாாியில் அதிபராக இருந்த ஆயிசா ரவூப் அவா்கள் கொழும்பு மாநகர சபையில் தேரதலில் வென்று அங்கு மக்கள் பிரநிதியாக பதவி வகித்து கொழும்பு வாழ் மக்களுக்குச் சேவையாற்றியுள்ளாா்.  தற்பொழுது கொழும்பு மாநகர சபையில்  30 பேர்  பெண் மக்கள் பிரநிதிகளாக அங்கத்தவா்களாக உள்ளனா். அதே போன்றுதான் எதிா்காலத்தில் நடைபெறவுள்ள மாகாண சபையிலும் அரசு 25 வீதமாக பெண்களுக்கு  சந்தா்ப்பம் வழங்க உள்ளது. 

பாராளுமன்றத்தில் உள்ள 225 பேர்களில் 60 பென்  பாராளுமன்ற உறுப்பினர்களாவது அங்கத்துவம் வகிக்க வேண்டும் ஆகவே தான் முஸ்லிம் பெண்கள் ஏனைய சமுகங்கள்போன்று  அரசியலிலும்  முன்னேற முன்வருதல் வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அங்கு  வேண்டிக் கொண்டாா். 










இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்தியா மற்றும் ஆஸி. அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸி. அணி தொடரை 2-0 என்ற கணக்கில் தமதாக்கிக் கொண்டது.

இந்திய மண்ணில் அண்மையில் இந்தியா அடைந்த மோசமான தோல்வியாகவே இத்தோல்வி நோக்கப்படுகிறது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி கோலியின் அபார ஆட்டத்தால் 20 ஓவர்கள் நிறைவில் 190 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய ஆஸி. அணி இரண்டு பந்துகள் மிதமிருக்க கிளன் மேக்ஸ்வெலின் வேகமான சதத்தின் துணையுடன் போட்டியில் வெற்றி பெற்றது.

போட்டியின் சிறப்பாட்டக்காரனாகவும் தொடராட்ட நாயகனாகவும் துடுப்பால் தனது திறமையினை வெளிக்காட்டிய மேக்ஸ்வெல் தெரிவு செய்யப்பட்டார்.


ஐ.தே.கட்சியின் வத்தளை தொகுதி அமைப்பாளரும் கம்பஹா மாவட்ட MP யும் சுற்றுலா, வனவிலங்கு மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சருமான ஜோன் அமரதுங்க அவர்களின்  அரசியல் வாழ்வுக்கு 40 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, முன்னாள் ஜனாதிபதியும் எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ச, ஐ.தே.கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உட்பட அதிதிகள் கலந்து கொண்டனர்.






(நாஸர் JP)

அரசாங்க வருமானத்தில் அரை வாசித்தொகை அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடப்படுவதாக அரச நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். 

அரச நிர்வாக அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அரச முகாமைத்துவ ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தத்தின் பின்னணியில் தோல்விகண்ட அரசியல் வாதிகள் இருப்பதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.. 

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை ஊழியர்கள் இன்று முன்னெடுக்கும் வேலை நிறுத்தம் நியாயமற்றது முகாமைத்துவ உதவியாளர்கள் சமர்ப்பித்த 12 கோரிக்கைகளில் 11 கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன. பட்டதாரிகளின் சம்பளத்தைப் போன்று தமக்கும் சம்பளம் வழங்குமாறு முகாமைத்துவ உதவியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

ஆனால், இதற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் முன்னர் இரண்டாயிரத்து 500 ரூபா சம்பள அதிகரிப்பு மாத்திரமே இடம்பெற்றது. 

ஆனால், நல்லாட்சி அரசாங்கம் பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கியது. அமைச்சரவைக் கூட்டத்தின் போது, அரச ஊழியர்களின் பதவியுயர்வு தொடர்பாகவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. சேவைப் பிரமாணங்களை திருத்தி அமைப்பது பற்றியும் கவனம் செலுத்தப்படவிருக்கிறது. சில அமைச்சர்கள் கொக்கெயின் என்ற போதைப்பொருளை பயன்படுத்துவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றி அரசாங்கம் விசாரணை நடத்துகிறது. 






சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையினால் பொலிஸாருக்கு சுதந்திரமாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால், போதைப்பொருளையும், பாதாள உலக கும்பல்களையும் கட்டுப்படுத்த முடிந்திருப்பதாக அரச நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்தார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கிய வரவு செலவு திட்ட உரை ( வரவு செலவு திட்ட 2ஆவது வாசிப்பு 2019ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. 

இது தொடர்பில் நேற்று அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. 

இதற்கமைவாக வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் 2019.03.06 தொடக்கம் 2019.03.12 திகதி வரையிலும் குழுநிலை விவாதம் 2019.03.13 தொடக்கம் 2019.04.05 ம் திகதி வரையில் நடத்துவதற்கும் வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு 219.04.05 ஆம் திகதி நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த வரவு செலவு திட்டம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.
அததெரண 


காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 35ஏ-வுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. இதன் மீது முடிவு எடுத்தால் மாநிலத்தில் அமைதிக்குப் பங்கம் ஏற்படும் என்றும், 2018 இறுதிவாக்கில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தும் முயற்சிகள் பாதிக்கப்படும் என்றும் மாநில மற்றும் மத்திய அரசுகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாநிலத்தின் நிரந்தக் குடிமக்களாக யார் கருதப்படுவார்கள் என்று வரையறை செய்யும் உரிமையை, இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிப்பதாக அரசியல் சட்டப்பிரிவு 35ஏ உள்ளது. அவர்களுக்கு சிறப்பு முன்விருப்ப உரிமைகள் அளிக்கவும் அது வகை செய்கிறது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு சொத்துகள் வாங்கவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது என்பது அதில் முக்கிய அம்சம்.

அரசுப் பணிகள், கல்வி உதவித் தொகைகள் மற்றும் இதர உதவித் தொகைகள் குறித்த விஷயங்களிலும் அது கட்டுப்பாடு செலுத்துகிறது.


அரசியல் சட்டப் பிரிவு 35ஏ அரசியல் சாசனத்துக்கு முரணானது என்று மனுதாரர்கள் கூறியுள்ளனர். ஆனால், அந்த சட்டப்பிரிவை ரத்து செய்தால், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தைப் பாதுகாப்பது என்ற இந்திய அரசின் வாக்குறுதி மீறப்படுவதாக இருக்கும் என்றும், நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே மாநிலமாக உள்ள காஷ்மீரில் சமூக அமைப்புக்கு அது அச்சுறுத்தலாக இருக்கும் என்றும், இந்த சட்டப்பிரிவை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர்.


என்ன நடந்தது?

அரசியல் சட்டப் பிரிவு 35ஏ-வுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் 2019 ஜனவரிக்கு ஒத்திவைத்து முன்பு உத்தரவிட்டது.

இந்த ஆண்டு செப்டம்பர், டிசம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த சமயத்தில் இதுகுறித்து முடிவு எடுத்தால் தேர்தலுக்கு முன்னதாக பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படும் என்றும் ஜம்மு காஷ்மீர் மாநில அரசாங்கம் கூறியதை அடுத்து உச்ச நீதிமன்றம் இந்த முடிவை எடுத்தது.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில் பாலமாக இருப்பதற்காக, மத்திய அரசால் நியமிக்கபட்டுள்ள, மாநிலத்தின் புதிய ஆளுநர் சத்யபால் மாலிக்கும், இந்த விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.


இன்றைய விசாரணைக்கு முந்தைய காலங்களில், சட்டப் பிரிவு 35ஏ-வுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை எதிர்த்து சில போராட்டங்கள் நடந்துள்ளன. இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள மக்கள் இந்தப் போராட்டங்களுக்குப் பரவலாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அது ஏன் நடந்தது?

அரசியல் சட்டப்பிரிவு 35ஏ-வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தி சிட்டிசன்ஸ் என்ற தன்னார்வ அமைப்பு 2014 ஆம் ஆண்டு முதலில் மனு தாக்கல் செய்தது. அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வகை செய்யும், அரசியல் சட்டப் பிரிவு 368-ன் கீழ் இந்த சட்டப் பிரிவு சேர்க்கப்படாத காரணத்தால், இது ''அரசியல் சட்டத்துக்கு விரோதமானது,'' என்று அதில் கூறப்பட்டிருந்தது.

அதற்குப் பதிலாக அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ பயன்படுத்தி 1954 மே 14ஆம் திகதி குடியரசுத் தலைவர் உத்தரவின் மூலமாக சட்டப்பிரிவு 35ஏ சேர்க்கப்பட்டது என்று பத்திரிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் தனக்கான சட்டங்களை உருவாக்கிக் கொள்வதற்கும்இ அதற்கென தனியாக அரசியல் சாசனம் வைத்துக் கொள்ளலாம் என்றும் இது அனுமதி அளிப்பதாகவும் பத்திரிகைத் தகவல்கள் கூறுகின்றன.

அதன்படி 1954 மே 14ஆம் திகதிக்கு முன்னதாக அங்கு பிறந்தவர் அல்லது குடியேறியவரோ, அல்லது 10 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து, அசையா சொத்துகளை ''சட்டபூர்வமாக வாங்கியவரோ'' மட்டுமே நிரந்தரக் குடிமக்களாக இருப்பார்கள் என்று இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது.

இருந்தபோதிலும்இ ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கான ''தற்காலிக ஏற்பாடாக'' மட்டுமே அரசியல் சட்டப் பிரிவு 370 உள்ளது என்றும், சட்டப் பிரிவு 35ஏ ''ஒன்றுபட்ட இந்தியா என்ற அடிப்படைக் கோட்பாட்டை'' மீறுவதாக உள்ளது என்றும் தி சிட்டிசன்ஸ் அமைப்பு வாதிட்டது.

காஷ்மீரைச் சேர்ந்த பெண்கள், அந்த மாநிலத்துக்கு வெளியில் உள்ள ஆண் ஒருவரை திருமணம் செய்து கொண்டால், சொத்துரிமை பெற முடியாது என்று இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் தடை விதிக்கப்படுவதால், அது பெண்களுக்கு எதிரான பாரபட்சமான சட்டப்பிரிவாக இருக்கிறது என்று கூறி டெல்லியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் வேறொரு மனு தாக்கல் செய்துள்ளார்.


உணர்வுப்பூர்வமான விஷயம் என்ன?

வேறு மாநில மக்கள் சொத்துகளை உடமையாக்கிக் கொள்ள அனுமதித்தால், மாநிலத்தின் சமூக அமைப்பு மாறிவிடும் என்று கவலை தெரிவிக்கப்படுகிறது.

அந்த சட்டப் பிரிவை ரத்து செய்தால், மத்திய அரசுடன் விரிசலில் இருக்கும் அந்த மாநிலத்தின் உறவு பாதிக்கப்படும் என்று மற்றவர்கள் கவலைப்படுகிறார்கள்.

1980களின் இறுதியில் இருந்து மத்திய அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தி வருவதன் காரணமாக, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு பதற்றம் மிகுந்ததாகவே இருக்கிறது.


இந்துக்கள் தங்கள் மாநிலத்தில் குடியேறுவதை இந்து தேசியவாத குழுக்கள் ஊக்கப்படுத்துகின்றன என்று காஷ்மீர் மக்கள் பலரும் சந்தேகிக்கிறார்கள்.

''மாநிலத்தில் சமூக அமைப்பை மாற்றுவதற்காக திட்டமிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. என்ன நடந்தாலும், அவ்வாறு நடப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,'' என்று தி வயர் இணையதளத்துக்கு ஆகஸ்ட் 3ஆம் திகதி அளித்த பேட்டியில் பிரிவினைவாத தலைவர் மிர்வைஸ் உமர் பாரூக் கூறியுள்ளார்.

இந்தியாவுடன் காஷ்மீர் மாநிலத்துக்கு உள்ள உறவில்இ சட்டப் பிரிவு 35ஏ முக்கியத்துவம் வாய்ந்தது என்று மக்கள் ஜனநாயகக் கட்சி (PDP) மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி (NC) ஆகிய பிரதான அரசியல் கட்சிகள் கூறுகின்றன.


''ஜம்மு காஷ்மீர் மக்களுக்கான சிறப்பு உரிமைகளும், முன்விருப்ப உரிமைகளும் பாதிக்கப்பட்டால், இந்திய தேசியக் கொடி அல்லாத வேறு கொடியை ஏந்துவதற்கு மாநிலத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்,'' என்று பி.டி.பி.யின் தலைவரும், மாநில முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி கூறியதாக ஜூலை 28 திகதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை தெரிவித்துள்ளது.

சட்டப் பிரிவு 35ஏ தொடர்பான சட்டப் போராட்டம் ''காஷ்மீர் பகுதியில் இந்திய ஆதரவு அரசியலுக்கு மரண அடியாக இருக்கும்'' என்று அவருடைய அரசியல் எதிரியான தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

''மாநிலத்தின் தன்னாட்சியைக் குறைப்பதற்கு புதுடெல்லி எப்போதும் சதி செய்து வருகிறது என்று கூறப்படும் கருத்துகளுக்கு வலுவூட்டும் வகையில் இப்போதுள்ள காஷ்மீரின் நிலைமை இருக்கிறது, கடந்த 70 ஆண்டு கால வரலாறு அப்படித்தான் இருக்கிறது,'' என்று அந்த மாநிலத்தைச் சேர்ந்த காஷ்மீர் அப்சர்வர் என்ற பத்திரிகையில் ஆகஸ்ட் 2ஆம் திகதி வெளியான தலையங்கம் கூறுகிறது.

''இந்த விஷயம் மிகவும் உணர்வுப்பூர்வமானது,'' என்று கூறியுள்ள மத்திய அரசின் வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், இதுகுறித்து ''விரிவான விவாதம்'' நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

''அரசியல் சட்டப் பிரிவு 35 ஏவுக்கு எதிராக ஏதாவது செய்யப்பட்டால், இந்தியாவுடனான உறவு உடனடியாக முறிந்துவிடும்,'' என்று ஜம்மு காஷ்மீர் ஒத்துழைப்புக் கமிட்டி என்ற உள்ளூர் மக்கள் அமைப்பு ஏற்கெனவே கூறியுள்ளது என்று காஷ்மீர் அப்சர்வர் பத்திரிகை சென்ற ஆண்டு ஆகஸ்ட் 26ல் எழுதியுள்ளது.

(BBC - Tamil)
Blogger இயக்குவது.